Friday 2 January 2015

சுபிட்சத் திருநாள்......ஜனவரி 1

சுபிட்சத் திருநாள்......ஜனவரி 1

அன்புநிறை ஆசீர்வாதங்கள்
அருள் ஒளியாய் இணைத்து ஒன்று கூடி அவனி இறங்கிய

சந்தோசப் பெருநாளில்

மனம்நிறைய நன்றி சுமந்து
நல் ஒளியாய் என்னுடன்
கடந்த வருடம் முழுவதும் நினைவு துணையாய்
நிழல் என காத்து கைகோர்த்த
அன்னை....அமைதியுறையும்

ஆழ்வேள்வி சன்னிதான சமாதி தேடி ....ஓடி வந்து

சரணடைந்து சமர்ப்பணமாகி

வரும்வாழ்வுக்கும் உயிராய் உடனிருக்க வரம் வேண்டி

தலை வைத்து வணங்கி
அன்னையெனும் புத்துணர்வை

அலைகடல் அருகமர்ந்து
பாறை தெறித்து மேனி சிலிர்க்க
தொட்டுத் தழுவும் ஈரமாய் இதம் வாங்கி

ஏகாந்த பெருவழியில் இலவம்பஞ்சு மனமாகி....கூதல் தென்றலில்
பறக்கும்...இலைச் சருகாகிறேன் அன்னையே....

கருவறையில் வந்தமர்ந்த நிம்மதி தாயே...

நீ நடந்த மண்ணில் ..
நின் காற்று சுவாசித்து

நான்...நடக்கையில்.......

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமங்களே..
ஓம் நமோ பகவதே.ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..