Wednesday, 17 December 2014

முகநூல் மேடை



உறவிலும் ...நட்பிலும்
தனி மனித சுதந்திரம் என்பது
மூக்கின் நுனி வரை தானே தவிர
முக்கை தொடுவதில்லை,,,


இடைவெளி இல்லாத
கணவன் மனைவி உறவுகளிலும்
நாம் எதிர்பார்ப்பது
வெளியிடங்களில்
ஒருவருக்கொருவர் பரஸ்பர
மரியாதையை தான்.....

அதீத அன்பினால் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் நம் மீது அன்பானவர்களை இழந்துவிடுகிறோம்
இழந்த பின் தன் புரியும் அந்த வலி...

மீண்டும் கிடைபார்கள் என்றாலும்....ஒரு கரும் புள்ளி மனதின் அடி ஆழத்தில் இருந்து கொண்டே தான் இருக்கும்
சின்ன சின்ன பிணக்குகளில்
எளிதில் நமை பயணிக்க வைக்கும்
பழைய பாதை நோக்கி.........

சிலரை பார்த்தவுடன் காரணமேஇல்லாமல் நமக்கு பிடித்துவிடும்......
நட்பாய் தொடருவோம்....


அவர்களின் குணம் அறியும் போது
சிலநேரங்களில் நம் நட்புக்கு அவர்கள்
தகுதியில்லாமல் போகலாம்
இல்லையேல்...நம்மிடம் உள்ள அன்பு பிரதிபலிப்பு அவர்களிடம் இல்லாமலும் போகலாம்

இந்த சூழல்களில் எல்லாம்
ஏனென்றே புரியாமல்
ஒரு வலி மனதில் வரும்.....

விட்டு துரத்த முயன்றாலும்
அதுவே நம்மில் பிரதானமாகி
போலியாய் சிரித்து நமை செயலிலக்க செய்யும்

உறவுகளிடம் சண்டை வரும் போது கூட.....அவர்கள் அப்படித்தான்
நாம் சரியா இருக்கிறோம்ல..பரவாயில்லை எனும் சமாதாணத்திற்க்கு மனம் செல்லும்

ஆனால் நல்ல நட்பு என நாம் நம்பியவர்கள் புரியாமல்
சந்தேகமாய் வேதணை படுத்தும் போது..எளிதில் சமாதாணம் அடைய மறுக்கிறது மனம்

சுக துக்கங்களை உரிமையாய்
பகிர்ந்த பின்னும்..
ஏன் ஏன் இவன்/இவள் என்னை புரிந்துகொள்ளவில்லை.....என்ற கோபமும்.ஆழமான.வருத்தமும் வருகிறது.....

அவர்களை நம்மில் இருந்து விலக்க முடியாமலும்......
நினக்காமல் இருக்க முடியாமலும்
நம் மீதே நமக்கு வெறுப்பு வரும்

தாயின் முழுஅன்பையும்
தப்பனின் கண்டிப்பையும்
உறவுகளின் அரவணைப்பையும்
கணவன் /மனைவியிடம் இல்லாத சுதந்திரத்தையும்
ஒரு சேர இணைத்து
நண்பர்களிடம் காண்பதாலோ

நமக்கு நட்பிடம் இத்தனை எதிர்பார்ப்பு....

ஆதலால் தோழமைகளே....
முகமில்லா முகநூல் தானே
என எளிதாய் நினைக்காதீர்கள்

நம் எண்ணங்களுக்கு வடிகாலாய்......
கடைகோடி மனிதரையும்
எளிதாய் புரிந்து கொள்ள...

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடமிருந்தும் ஏதோ ஒன்று நாம் அறிந்து கொள்ள

நம் உணர்வுகளை உரிமையாய் பகிர்ந்து கொள்ள நல்லதொரு உயிர் தரும் நட்புலகம் என எண்ணி......

மேடை தந்த 'மார்க்'எனும் நண்பனுக்கு நன்றி சொல்வோம்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..