உன் அழகில்
செப்பனிடாமல்
சிதறிகிடக்கிறது
என் காதல்
அனலாய் ஏறியமர்ந்து
மெதுமெதுவாய்
எனை உருக்கும்
காதல் நீ
விடலைக் கனவுகளை
சுகமாய் மீட்டி.....
இமைக்க மறந்த
விழிகளை குருடாக்கும்
அழகுக் காதல் நீ...
சுகமாய் மீட்டி.....
இமைக்க மறந்த
விழிகளை குருடாக்கும்
அழகுக் காதல் நீ...
படபடக்கும் பட்டாம் பூச்சிகளை
பூத்திருக்கும்
என் பருவ காட்டுக்குள் வந்து
பாரபட்சமில்லாமல்.....
குடை பிடித்து
விட்டுச் செல்கிறாய் காதலே
பூத்திருக்கும்
என் பருவ காட்டுக்குள் வந்து
பாரபட்சமில்லாமல்.....
குடை பிடித்து
விட்டுச் செல்கிறாய் காதலே
உன் ஒற்றை விரல்
தீண்டும் ஆதரவில்...
உயிரை துச்சமென
நினைத்து.....
சோதனைகளை
சாதனைகளாய் மாற்றுகிறது
என் வாழ்க்கை.
வேண்டாம் என் கிட்ட
வச்சுக்காத..
நான் எழுந்தேன்..
நீ செத்த...என
ஒற்றை விரல் நீட்டி
குழந்தையாய்
எச்சரிக்கிறது....
உன்னில்
அத்துமீறும்
என் விரல்களை
உன் காதல்
வச்சுக்காத..
நான் எழுந்தேன்..
நீ செத்த...என
ஒற்றை விரல் நீட்டி
குழந்தையாய்
எச்சரிக்கிறது....
உன்னில்
அத்துமீறும்
என் விரல்களை
உன் காதல்
அதிகாரமாய்
ஜெயிக்கும் கணவர்கள்.........
பெரும்பாலும் காதலியிடம்
அடிமையாய்
தோற்றுத்தான் போகிறார்கள்...
உன் வருகை.....
சத்தமில்லாமல்
அறைந்து செல்கிறது
என் இரவுகளை....
அவளின் நினைவுகளால்
இதழ்கள்கிடையே...
வெட்கப்பட்டு
சிக்கிக் கொள்கிறது
காதல்.
எல்லா கடற்கரையிலும்
அலைகளால்
ஒதுக்கப்பட்டுள்ளது
அதன் சுவாசம்
தாங்கிய சங்கு
வாலிபத்தின்
முதல் காதல் போல்......
அலைகளால்
ஒதுக்கப்பட்டுள்ளது
அதன் சுவாசம்
தாங்கிய சங்கு
வாலிபத்தின்
முதல் காதல் போல்......










No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..