Wednesday, 17 December 2014

நேசத்தின் வாழ்வியல்-2


மரவீடு கட்டிக் கொண்டு
வாழ ஆசைப்படுகிறது
முதியோர் இல்லத்தில் இருக்கும்
கூடு தொலைத்த குருவிகள்


கழுத்து மணி மாட்டப்பட்ட வாழ்க்கையில்....
முடிவை நெருங்கும் முன் மெதுவாய்,,அமைதியாய்
திரும்பிப் பார்க்கிறேன்.....
இதுவரை சத்தமிட்டுக்கொண்டே
கடந்து வந்த பாதையை...



கஷ்டங்கள் கொடுத்து
பலநேரங்களில்
கடவுள் இப்படித் தான் சொல்கிறார்


எத்தனை காசு கொடுத்தாலும்
என்னால் விலைக்கு வாங்க முடியாது......
நானும்...என் சகோதரனும்
சண்டையிட்டுக்கொண்டே
அழுது சிரித்து.........
கைபிடித்து
சந்தை சென்று
வந்த நாட்களை..


சில நேரங்களில்
தலையில் அடித்துக்
கொள்ளுமளவுக்கு
நம் பொறுமையை
சோதிக்கிறது..........
அதீத அன்பு வலைக்குள்
நமை சிக்க வைக்கும்
உறவுகளும்....
நட்புகளும்.............


முதுமையும்.....
குழந்தையும்.....
எல்லோருடனும்
எளிதாய் தோழமை
கொள்கிறது........
பழசை எளிதில் மறக்கும்
ஞாபகமறதியால்


கவள உணவு
கடைவாய்க்குள்...
இறங்கும் போதெல்லாம்
ஏனோ தெரியவில்லை.....
இறந்து போன தாய் முகம்
கண்முன் வந்து..கண்ணீரில்
நிழலாடுகிறது..


மழலை மனசில்
பயமறியாமல்
பாசம் கொள்கின்றன.....
ஐந்தறிவும்.....
ஆறறிவும்.


மடி வயிற்றில்
சுமக்கும் போதே தாய்
கற்றுக்கொள்கிறாள்......
மனதிலும் ..முதுகிலும்
மழலையை இறக்கிவிடாமால்
ஏந்திக்கொள்ள


நமக்கு தெரியாமல்
நம்மில் பதிந்துள்ளது
அமைதியாய்..கொடூரமாய்
குண சாயம் பூசிய
நம் இருவேறு முகம்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..