Tuesday, 16 December 2014

என் காதலா...என் கதிரா...!


TODAY...MY SPRITIUAL DAY.............

MY ONE ..&...ONLY HERO.....MY KATHIR..BIRTHDAY........

MY DEAR FRIEND'S ..PLS..BLESS MY MAN..............

இதோ....
என் கணவருக்கு என் அன்பு பரிசாய்....
என் கன்னித்தமிழ்...........

என் கவிதைகளின் நாயகன்....
என் காதலின் காவலன்...........
நீள்வட்டப் பாதையில்
நாளும் என் பூமி சுற்றும்
'என் கதிர்' அவனை

"ஐ'எட்டு வருடங்களுக்கு முன்
அழுதுகொண்டே
என் தலைவன்
பிறந்ததை......
தாய் அவள் பார்த்து ரசித்திருக்கலாம்....
ஆனால் ஆனந்தமாய் கூட
இனி உன் விழிநீர்
பார்க்கும் சக்தி
என் ஜீவனுக்கில்லை.....

என் இன்ப துன்பங்களை
நான் முதலாய் பகிர்ந்துகொள்ளும் தோழமை நீ......

எனை சிரிக்க வைக்க.....
அன்பாய் அழவைக்க.....
மீசை முறுக்கி ஆளுமை செய்ய....
தென்றல்கூடஎனைக் காயப்படுத்தாது...
சிறகுக்குள் வைத்து
அடைகாக்கும் ஆண்மையே.....
என்ன வசியம் வைத்து
எனைப் பைத்தியமாக்கினாய்
நிமிடம்தோறும் உன் நாமம் சொல்ல.........

இதற்க்குதான். நான் பிறக்கும் முன் மண்ணில் அவதரித்தாயோ
என் மறு தாயாய்...

என் எல்லாவித உணர்வுகளையும்
சரியாகப் புரிந்துகொள்ளும்
நான் பகிர்ந்துகொள்ளும்
தோழமையே.......
நமை...நாம் நினைக்காத நிமிடங்கள்
ஒருபோதும் நம்மில் இல்லை.....

சிறு சலனங்கள் கூட இல்லாமல்..ஒடும் நதியாகிறோம்
காதலில் நாம்...
..
அனுதினமும்..அன்புச் சண்டைகளால்
புதுப்பித்துக்கொள்கிறோம்
நமையே.... நாம்........

கணவன் எனும்
குருட்டுதன அதிகாரம்
காட்டாது
நண்பன் எனும்
சுதந்திரத்தால்
ஆளுகிறாய் என் சாம்ராஜியத்தை.......

மண்ணில் பிறவியெடுக்கும்
எல்லா ஜென்மங்களிலும்
என் உயிர் சென்று
உரிமையாய் அமரும் இடம்
'என் கதிர்' அவன் உடல்.....

புனிதமான வாழ்வு தந்த அன்னையே.......
என் ஆயுளையும் எடுத்து
என் கதிரோடு இணைத்து
பல்லாண்டு..பல்லாண்டு....
பல்லாயிரம் ஆண்டுகள்...
என் தலைவன் வாழ வரம் தா....
உயிர் உருக வேண்டுகிறேன்...உன்னை
மஞ்சள் குங்குமமாய்
எனக்கு மடிபிச்சை தந்த தெய்வமே......
வாழ்க நீ என்றும் வல்லமையாய்.....

இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.....
என் காதலா...என் கதிரா...!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..