உன் பூனைக்குட்டி
நினைவுகளை.....
மனக்கூடையில்
சுமந்து கொண்டே
செல்கிறது---என் காதல்.
என் முத்தங்களை.....
இமை மூட விடாமல்மொத்தமாய்..இழுக்கிறது
உன் உதிரச் சாயம்
பூசிய உதடுகள்
கருவாய் உடைந்த
காதலுக்கு.....என்னில்கண்ணீர் அஞ்சலி
செலுத்துகின்றன....
கனவாய் இருக்கும்
அவள் நினைவுகள்
விட்டுப் போகும் போதெல்லாம்
விரல் நீட்டி........
விடை கொடுக்க முடியாமல்
தவிக்கிறது--காதல்....
விரல் நீட்டி........
விடை கொடுக்க முடியாமல்
தவிக்கிறது--காதல்....
தாயிடம் அடம் பிடிக்கும் குழந்தையாய்....
வயதுகள் மறக்கிறது
வாழ்க்கை.......காதலும் பாசமும்
போட்டி போட்டுக்கொண்டு
கழுத்தைக்கட்டி
கொஞ்சும் போதெல்லாம்....!!!





No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..