Tuesday, 16 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-11

எங்கு சென்றாலும்.....
உன் பூனைக்குட்டி
நினைவுகளை.....
மனக்கூடையில்
சுமந்து கொண்டே
செல்கிறது---என் காதல்.

என் முத்தங்களை.....
இமை மூட விடாமல்
மொத்தமாய்..இழுக்கிறது
உன் உதிரச் சாயம்
பூசிய உதடுகள்

கருவாய் உடைந்த 
காதலுக்கு.....என்னில்
கண்ணீர் அஞ்சலி
செலுத்துகின்றன....
கனவாய் இருக்கும்
அவள் நினைவுகள்



விட்டுப் போகும் போதெல்லாம்
விரல் நீட்டி........
விடை கொடுக்க முடியாமல்
தவிக்கிறது--காதல்....
தாயிடம் அடம் பிடிக்கும் குழந்தையாய்....

வயதுகள் மறக்கிறது
வாழ்க்கை.......
காதலும் பாசமும்
போட்டி போட்டுக்கொண்டு
கழுத்தைக்கட்டி
கொஞ்சும் போதெல்லாம்....!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..