Tuesday, 16 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-10

இதழ் விரித்த தாமரையாகி
இரவுகளை கொல்கிறாயடி
என் சித்திரைப் பெண்ணே..

கடல் கடந்து
இரைதேடச் சென்ற
பறவைகள்......
மறக்காமல் எடுத்துச் செல்கின்றன
மனைவியை முத்தமிட்ட ஞாபகங்களை.....
புகைப்படத்தில்.....

நாக்கை நீட்டி
பழிக்கும் போதெல்லாம்
குழந்தை அழகாகி
உள்ளம் அள்ளுகிறாய்
காதலே...


இரவெல்லாம்
இமை மூடாமல்
நீ கதை படிக்க.அதை...
கவனமாய் கேட்டு ....
மழலையெனும்......
பரிசு தருகிறது.....
என் காதல்..

பொத்தி பொத்தி மறைச்சு
வைத்த காதல்.....
இரவெல்லாம் வந்து
கனவுகளாய் ...
க(ரு)ழுத்தைக்கட்டிக்கொள்கிறது ....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..