Wednesday, 17 December 2014

விடையில்லா நேசங்கள்

தொட்டணைத்து
தொடர்ந்து வந்து

முத்தமிட்டு முகிழ்த்தி
நெகிழ உருக்கியென
கற்பனையாடி

பிடித்திருக்கா .........
பலமுறை கேட்டு

உன்னை எனக்குள்
விதைத்த பின்

பிரிய எப்படியடா
மனசு வருது??

வினா துடிக்கிறது
தழை அறுத்து
உன் சரணடைந்த
விடையில்லா நேசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..