நீயும் நானும்
கொண்ட காதலை
இப்படித்தான் பார்க்கின்றனர்
உன்னையும் .....என்னையும்
பெற்றவர்கள்
தாயின் முகத்தில்
கால் வைத்து
தலையில் தாவி ஏறி
அமரும் குழந்தையாய்..
உன் காதல் ..உரிமையாய்
என்னில்....
எதிரிகளிடம்
எப்போதும் காணப்படும்
முதுகில் குத்தாமல்
முகத்தை பதம் பார்க்கும்
கண்ணிய நட்பு..
கண்கள் மூடிய உறக்கத்தில்
அடிக்கடி வந்து
அச்சமில்லாமல்
மூக்கோடு மூக்கு
உரசிச் செல்கிறது
விழிகள்மூடிய
உன் முகம்.
அமைதியாயிருக்கும்
என் உதிரக் குளத்தில்
ஆசைக் கல் எறிந்து
செல்கிறது..உன்
உணர்வுக் காதல்
உன் சுவாச தென்றல்
தாலாட்ட.....
அச்சமில்லாமல்
அந்தரத்தில் உறக்கம்
கொள்கிறது...
உன் நினைவுக் காட்டுக்குள்
என் கனவு...
என்னவனே
உன் விஷமப்
பார்வை கண்டு
நாணக் குடை வைத்து
தனை மறைத்துக் கொள்கிறது
என் காதல்
இப்படித்தான்....
உனைப்பார்க்கும் போதெல்லாம்
எனையும் மீறி
எட்டிப்பார்க்கிறது
என் காதல்...
நான் உயிராய்
உன்னில் வாழ....
தாய்பறவை உணவாய்
உந்தன் முத்தங்களை...
ஊட்டுகிறாய் காதலே...
என் காதலை
கையில் எடுத்து...
முத்தமிட்டு...
முடி பிடித்து உலுக்கி
கசக்கி பிழிந்து
தூக்கி எறிந்து
தள்ளி வைத்து
ஏக்கமாய்
பார்த்து பார்த்து
உரிமையாய்
விளையாடுகிறது
உன் குழந்தை மனசு......
என் மொழிகளில்
உயிரோட்டமாய்
தெரியாத என்னை....
உருவங்களில் மட்டும்
உணர்ந்துவிடுவாயா
நட்பே...நீ
உனைத் தேடி தேடி
சலித்த கண்களுக்கு
இமை கசக்கி
எங்கு பார்த்தாலும்
எல்லாஇடங்களிலும்
இடைவெளியில்லாமல்
நீயே நிறைகிறாயடி
காதலே ...
தாய்மையின்
தாலாட்டுகளுக்கு
மொழியும் தேவையில்லை......
தூரியும் தேவையில்லை
தாயின் கழுத்து
வளைவே போதும்...
கொண்ட காதலை
இப்படித்தான் பார்க்கின்றனர்
உன்னையும் .....என்னையும்
பெற்றவர்கள்
தாயின் முகத்தில்
கால் வைத்து
தலையில் தாவி ஏறி
அமரும் குழந்தையாய்..
உன் காதல் ..உரிமையாய்
என்னில்....
எப்போதும் காணப்படும்
முதுகில் குத்தாமல்
முகத்தை பதம் பார்க்கும்
கண்ணிய நட்பு..
அடிக்கடி வந்து
அச்சமில்லாமல்
மூக்கோடு மூக்கு
உரசிச் செல்கிறது
விழிகள்மூடிய
உன் முகம்.
என் உதிரக் குளத்தில்
ஆசைக் கல் எறிந்து
செல்கிறது..உன்
உணர்வுக் காதல்
தாலாட்ட.....
அச்சமில்லாமல்
அந்தரத்தில் உறக்கம்
கொள்கிறது...
உன் நினைவுக் காட்டுக்குள்
என் கனவு...
அலைகளுக்குள்
வானவில்லாய்
தொலைந்த உன்னை
அனுதினமும் எதிர்பார்த்து
கரையிலேயே.....
கண்கள் பூத்து
காத்துக்கிடக்கிறது
என் காதல்
வானவில்லாய்
தொலைந்த உன்னை
அனுதினமும் எதிர்பார்த்து
கரையிலேயே.....
கண்கள் பூத்து
காத்துக்கிடக்கிறது
என் காதல்
உன் விஷமப்
பார்வை கண்டு
நாணக் குடை வைத்து
தனை மறைத்துக் கொள்கிறது
என் காதல்
உனைப்பார்க்கும் போதெல்லாம்
எனையும் மீறி
எட்டிப்பார்க்கிறது
என் காதல்...
உன்னில் வாழ....
தாய்பறவை உணவாய்
உந்தன் முத்தங்களை...
ஊட்டுகிறாய் காதலே...
கையில் எடுத்து...
முத்தமிட்டு...
முடி பிடித்து உலுக்கி
கசக்கி பிழிந்து
தூக்கி எறிந்து
தள்ளி வைத்து
ஏக்கமாய்
பார்த்து பார்த்து
உரிமையாய்
விளையாடுகிறது
உன் குழந்தை மனசு......
உயிரோட்டமாய்
தெரியாத என்னை....
உருவங்களில் மட்டும்
உணர்ந்துவிடுவாயா
நட்பே...நீ
சலித்த கண்களுக்கு
இமை கசக்கி
எங்கு பார்த்தாலும்
எல்லாஇடங்களிலும்
இடைவெளியில்லாமல்
நீயே நிறைகிறாயடி
காதலே ...
உன் சுவாசத்தை
என் உயிர் குடுவைக்குள்
அடைத்து வைத்து
நொடிக்கொருமுறை
மென்மையாய்
வருடி துடிக்கிறது
என் மயிலிறகு காதல்
என் உயிர் குடுவைக்குள்
அடைத்து வைத்து
நொடிக்கொருமுறை
மென்மையாய்
வருடி துடிக்கிறது
என் மயிலிறகு காதல்
தாலாட்டுகளுக்கு
மொழியும் தேவையில்லை......
தூரியும் தேவையில்லை
தாயின் கழுத்து
வளைவே போதும்...















No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..