Tuesday, 16 December 2014

நட்பெனும் சுவாசம்-2

காயம் தந்து
விட்டுச் சென்ற
ஊதாக் காதலை
கட்டு போட்டு....
சரிசெய்கிறது
விரல்களில் பூத்த தோழமை..


நம்பிக்கை விதைகளை
நம்மில் தூவிச்செல்லும்
எப்போதும்...
நல்ல நட்பு


இறுகப் பிடித்துக்கொள்ளடி...
அந்த பொல்லாத அலை
பொறாமையாய் வந்து
நம்மை வேரோடு அசைக்க பார்க்கிறது



சீக்கிரம் ஓடி வாருங்கள்
என் சிட்டுக்குருவி தோழமைகளே...
ஒரு தட்டில் உணவு உண்டு
ஒட்டுவீட்டில் கூடு கட்டி
கீச்சு மூச்சு சண்டையிட்டு
கைகோர்த்து சிறகு விரிக்கலாம்
நட்பெனும் வானில்...நாமும்.


விட்டுச் சென்ற நட்பு...
கண்ணீரோடு வந்து
கட்டியணைத்து ....
முத்தமிட்டு முத்தமிட்டு
சிரித்து சிரித்து அழவைக்கிறது என்னை.


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..