எல்லையில்லா நட்பாகி........
காலப் புயலில்
விட்டுப் பிரிய முடியா
காதலாய் கனிகிறது...
என்று கேட்டு கேட்டு....
ஆசையை தூண்டுகிறாயடி...
காதலே
பாக்குமர ஆடை கட்டிக்கொள்கிறது காதல்..
விவஸ்தையின்றி நீ பார்க்கும் போதெல்லாம்....
மடியில் சாய்த்து
முத்தமிட.....
ஆசை ஆசையாய் நெருங்கி..விட்டு....
அவசரத்தில்
அசட்டுத்தனமாய்.......
எதையாவது செய்து விட்டு
சிரிக்கிறாய்..காதலே
உறவுகள் முடியாமல்
ஒவவரு நாளும்
புதிது புதிதாய்
பாதையமைத்து பயணிக்கிறது
நம் காதல்..
உரிமையாய்.........
காதலாய்...காவலாய்
வந்து படுத்துக்கொள்கிறது
அவளின் நினைவு........
காதல் சமைத்து ......
பசியாறிக்கொள்கிறது பருவம்
ஒருமித்து பயணிக்கிறது..
உடலால் இருவேறாய் இருக்கும்
நம் தண்டவாள உயிர் பாதைகள்...
காதலாய்
பிரிந்து செல்லும் கனவுக்கு
விடைகொடுக்க மறுக்கிறது
அதிகாலை உறக்கம்..
உன் பாதங்களை
எதிர்பார்த்து
பூக்களை கொட்டி
காத்திருக்கிறது
என் பாதைகள்....
பூத்திருக்கும் பருவத்தை
ஓசையில்லாமல்
தட்டி விட்டு விட்டு.....
பரிதாபமாய்
முழிக்கிறது காதல்....
ஓசையில்லாமல்
தட்டி விட்டு விட்டு.....
பரிதாபமாய்
முழிக்கிறது காதல்....
கோபித்துக்கொள்.......
முகம் திருப்பிக்கொள்.....
ஆனால் அருகிலேயே இரு.....
தனியாக மட்டும்
விட்டுவிடாதே
தவித்துப்போய் விடுவேன் உயிரே....
பிரிந்து சென்ற காதலை...
மீண்டும் காண்ட போது.....
இமை மூடும் இடைவெளியில்
மறுபடி இழந்து விடுவோமே
என்ற பயத்தில்..
உன்னிலும் என்னிலுமான
ஊடல்களை........
பறந்து பறந்து
வேடிக்கைப் பார்க்கிறது..
உறவுகள்.......
நாம் மறந்த சண்டைகள்
குளுமையாய் ,,அவர்களில் அசைபோடப்படுகிறது
நம்மைப் பார்க்கும் போதெல்லாம்.....
ஊடல்களை........
பறந்து பறந்து
வேடிக்கைப் பார்க்கிறது..
உறவுகள்.......
நாம் மறந்த சண்டைகள்
குளுமையாய் ,,அவர்களில் அசைபோடப்படுகிறது
நம்மைப் பார்க்கும் போதெல்லாம்.....















No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..