Wednesday, 17 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-19

உன்னை
என்னில்
நிழலாய்
வரைந்து செல்கிறது
காதல்



எத்தனை காசு கொடுத்தாலும்
என்னால் விலைக்கு வாங்க முடியாது......
நானும்...என் சகோதரனும்
சண்டையிட்டுக்கொண்டே
அழுது சிரித்து.........
கைபிடித்து
சந்தை சென்று
வந்த நாட்களை..



கண்ணாடித்தரையில் படுத்து தனைத்தானே ரசிக்கும்
குழந்தையாய்,,,,,,,,,
நீ தொட்டுச் சென்ற கரங்களை
தடவிப் பார்த்து மகிழும்
என் காதல்....



காயங்களோடு
எனை
உன்னிலிந்து
பிரிவெனும் பற்களினால்
கடித்து துப்பிச்
செல்கிறது
காலம்..


ஒரு துறவியாய்.......
உனை மட்டுமே
நினைத்துக்கொண்டு
அருவிகளை கடக்கும்
அசாத்திய துணிச்சலை
காதலாய் தருகிறாயடி பெண்ணே


இதழ்களை
மொத்தமாய் குவித்து
சத்தமில்லாமல்
இழுக்கிறாயடி.....
எப்பொழுதும்
எனைக் காதலாய்....


உன்னருகே நெருங்கும் போதெல்லாம்..
'எதுவும் பேசாதே'
என என் மொழிகளை
ஆணையிடுகிறது
உன் அழகு...


குட்டி குட்டியாய்
எந்தன் மனமெங்கும்
மகிழ்ச்சிப்பூக்கள்
மலைச்சாரலாய்
ஆனந்த கண்ணீருடன் பூத்தது
என் போன்சாய் குட்டிமா
வரவைக் கண்டு....


நித்தம் நித்தம்
விடை கொடுக்கும் முன்
கடைசியான கைகுலுக்களில்
'அழுத்தமாய்' பதிக்கிறாய்
என் பிரிவின் வலியையும்.....
உன் உறவின் ஏக்கத்தையும்.


நமக்குள்ளான
சண்டைகளுக்கு பின்
வரும் சமாதாணத்தில் தான்
நமையறியாமல்
நம்மில் ஆவேசமெடுக்கிறது
காதல்



எந்தன் கனவலைகளிலும்
நினைவலைகளிலும்
அடங்காமல் எழும்பி எழும்பி
துள்ளுகிறது.......
கைகளில் நீ இட்ட
பொன் முத்தம்


கருத்து வேறுபாடில்லாமல்
உனக்குள்ளும்.....
எனக்குள்ளும்
பூத்திருக்கிறது
சின்ன சின்ன
சில்மிஷங்களுடன் காதல்



வேரறுந்து நான்
எனக்குள்ளேயே
வீழும் போதெல்லாம்
தாயாகி எனை
வயிற்றுச் சூட்டில்
தாவியணைத்துக் கொள்கிறாய்
காதலே.


உன் மின்னல்கள்
தெறிக்கும் இதழ்கள்பட்டு
நிறக் குருடாகிப் போகிறது
என் முத்தங்கள்



இலைகள்
இல்லாமல்
என்னில்
கிளைகள்
விட்டு பூத்த
காதல் நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..