Wednesday, 17 December 2014

ஓடி வாடி தோழி

செப்பு சாமான்கள்
எடுத்துக் கொண்டு
தோட்டக் காட்டுக்குள்
ஓடி வாடி தோழி.....
பூ வீடு அமைத்து
சுள்ளி அடுப்பு மூட்டி
மணக்க மணக்க
மகிழ்சியால் மனம்
கனக்க..கனக்க
மண்சோறு சமைத்து
பொம்மை குழந்தைக்கு
ஊட்டிவிட்டு.....
வயது மறந்து
மறுபடியும் மழலையாய்
தோழமைக் குடும்பம்
நடத்தலாம் ..........
ஓடி வாடி தோழி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..