Tuesday, 16 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-18

நேராகப் பார்க்கச்சொல்லி
விழிகளுக்குள் விழிகள்
ஊடுருவி.....ஒவ்வருமுறையும்
எனைக் கண்டுபிடிக்கிறாய்
காதலே.


உந்தன் ஈரமனசின்
பாசப் பிசுபிசுப்பில்
பசுமையாய்........
ஓலக் குடிசை வேய்ந்து
வாழ ஆசைப்படுகிறது
என் மலர்க் காதல்


உன்னை
ஆதரவாய் தோள்சாய்த்தேன்
இப்போது எனக்கு ஆறுதல்
சொல்ல ஆள் தேவையடி
காதலே....


சமுத்திரப் பெருவெளியில்
இலக்கின்றி அலைந்த என்னை
திருமணக்குடுவைக்குள் அடைத்து
உன்னில் மட்டுமே
உல்லாசமாய் உலவ விட்டது
காதல்...


தலை முட்டி
சிரித்துக்கொள்ளும்....
தோழமை தான்
ஆணிவேராய்..தாங்குகிறது
அதிகாரங்கள் களைந்த
காதலை...............


உனக்கு பிடித்த பூக்களை
உனக்கு பிடித்த வண்ணத்தில்
தேடித் தேடிப் பரிசளிக்கிறது
என் காதல்..


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..