Tuesday, 16 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-14


அலையடிக்கும் காதலே
உன் வருகையை எதிர்பார்த்து
வாசல் திறந்து வைக்கிறது
வாழ்க்கை........தன் வயது மறந்து


தோள் சாய்ந்த அழகே...
உனை தன்
இமைகளுக்குள்......
உறக்கமாய்
இழுத்துக்கொள்கிறது
என் காதல்


என்னவளே
என்னில் நீ காதலாய்
பூத்தாலும் அழகு........
இலைகளாய் துளிர்த்தாலும்
அழகு....


புயலாய்..எனில்
மையம் கொண்டு
கடந்து செல்லும்
போதெல்லாம்
எனை உன்னோடு
கடத்திச் செல்கிறாயடி.
காதலே...


காதல் ரகசியங்களை 
காதில் நீ சொல்ல சொல்ல
விவஸ்தையின்றி தவிக்கிறது
நம் உறவும்.....இரவும்,.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..