Tuesday, 16 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-15

உன்னையும் என்னையும்
ஏப்ரல் - 1 ஆக்கி
நம்மில் ஜெயித்துக்கொள்கிறது
காதல்....


நட்பெனும் புறாவை
தூதுவிட்டேன் காலில் ரோஜாகட்டி........
;
;

காதல் தூக்கிக் கொண்டு
பறந்தது........
நண்பனையும்...காதலியையும்...


சுட்டுவிரல் காட்டி
பெண்மையை
குற்றம் சொல்லும்.....
மீசை முளைக்கா
விடலைக் காதல்..பெரும்பாலும்
முதல் காதலாய் நிறைந்துள்ளது.....
வயது நரைத்த ஆண்மையில்...


உன் அலையாடிய
தாலாட்டுகளில்
நிம்மதியாய் நித்திரை
கொள்கிறது என்
கரையோரக் காதல்


முத்தமிடும் இதழ்கள் திறந்து.....
கொக்கியிடும் விழிகள் மூடி....
அழகெனும் திமிராய்.......
என் இரவுகளை..தகிக்கிறாயடி
காதலே...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..