சுகமான கனவுகளாய்
வந்து முகம் புதைத்துக்கொள்கின்றன
அவன் இரவுகள்........
நினைவுகளால்
எனை சுழற்றி சுற்றும் நீலப் புயலடி...நீ
வாய்பேசா மெளனத்தில்..
உரிமையாய் நீ கோபம் கொண்டு பார்க்கும் போதெல்லாம்
உலகில் உள்ள மொத்த அழகும்
சத்தமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
கண்மைதீட்டிய
கருவிழிகளுக்குள்
கயிறுகட்டி
பொம்மாலாட்டம் ஆட வைக்கிறாய்..காதலே.....
உன் எண்ணங்களுக்கு
ஏற்றவாறு என்னை.....
காதலாய்..
உனை விரட்டிச்செல்லும்
நினைவுகளுக்குவிடைதர முடியாமல்
தனிமையை காதலிக்கிறேன்
இமை மூடி கசியும்
பனித்துளியாய்....
உதிரக்கண்ணீர்..
இதழ் ஓரத்தில்..





No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..