Tuesday, 16 December 2014

அழகு சித்திரை பெண்ணை.....



கசப்பிற்காக...
வேப்பம் பூ ரசம்....
புளிப்பிற்காக
மாங்காய் பச்சடி .........
இனிப்பிற்காக
பலாச் சுழை பாயாசம்........
என பல்சுவையும் சமைத்து.....
ஆப்பிள் ..ஆரஞ்சு...
கொய்யா..மாதுளை
முலாம்பழக் கனிகளுடன்........
வரவேற்றேன்
தங்க ஆபரணம் அள்ளிப்பூட்டி.......சிலு சிலு பட்டுத்தாவணி கட்டி........
நந்தனப் பருவம் சுமந்து..
ஆடி ஆடி அசைந்து
இசைந்து நடந்துவரும்
அழகு சித்திரை பெண்ணை.....


தமிழ் வாழ.........
தமிழர் வாழ்வு செழிக்க
மனங்களின் இறுக்கங்கள்
குறைந்து மனிதமும் புரிதல்களும் உறவுகளிலும்
நட்புகளிலும்..நிறைந்திட
அன்பெனும் அட்சயப்பாத்திரம் தளும்ப தளும்ப ஏந்தி.....
ஆடி வாடி...அசைந்து வாடி
இசைந்து வாடி..இனிமையாய் வாடி ..பொன் மகளே..........
என் தமிழ் மண் மகளே....என்று ஆசை ஆசையாய் வரவேற்றேன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..