Thursday 1 October 2015

எங்கிருக்கிறாய்...அண்ணா

எப்படி

பேசுவது
சிரிப்பது

உடுத்துவது
சாப்பிடுவது

சவால்களை
எதிர் நோக்குவது என

சிறகில் அடைகாத்து
கவலை களைந்து
கற்றுத் தந்தாய் ...

ஆயிரம் பேர் ..அன்னைபோல்
அருகில் இருந்தாலும்

துயருரும் போதெல்லாம்
உன் விரல் பிடித்து
நம்பிக்கை நடக்கவே

துடிக்குது
தவிக்கும் மனம்

எங்கிருக்கிறாய்...அண்ணா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..