Saturday 3 October 2015

புஷ்பாஞ்சலி


பக்திநிறை அருளுக்கு பவித்திர துளசி
சக்தி முன்னேற்றத்திற்கு மஞ்சள்செவ்வந்தி

செல்வம் தரும் வளமைக்கு நாகலிங்க பூ
மணம்நிறை வாழ்வுக்கு கனகாம்பரம் 

தெய்வ சித்தம் தர வெண்தாமரை பூ
அவதார மேன்மைக்கு செந்தாமரைப் பூ

நீடித்த வாழ்விற்கு வாடாமல்லி
மனதின் தெம்பு வழங்க துலுக்க சாமந்தி

மனநிறை அமைதிக்கு வெண் செவ்வந்தி
தவறை நேர்செய்ய செவ்வரளி

சரணாகதி பிரியத்திற்கு இளஞ்சிவப்பு ரோஜா

அன்னைஉன் மலரடிகளில் 
ஆனந்த சமர்ப்பணம்

மா ....சரணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..