Saturday 3 October 2015

நம்பிக்கை ஊசலாடும் மகவு

ஒய்யாரக் கழியில்
பிள்ளை ஏற்றி
ஒரு சாண் வயிற்றுக்கு
வீதியெங்கும்
வித்தை காட்டினான்

பாவமென்று
பல பார்வை பரிதாபம்
பேசிய போதும்

பயமென்பது அறியாது

காப்பான் தகப்பனென்று
நம்பிக்கை ஊசலாடும் மகவு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..