Thursday 1 October 2015

கேட்டேனா பாதகத்தி...


அடித்து பெய்த
அந்த மழை இரவில்

ஊர் உறவுக் கதையெல்லாம்
சொலவடை செப்பி பேசியதில்

அர்த்தசாமத்தில்
சண்டை வந்தது
அப்புச்சிக்கும் அய்யமைக்கும்

எப்போதும் 
பேசாத அப்புச்சி
அன்னைக்குனு பார்த்து 
பதிலுக்கு எகிற

ஓங்கி ஒப்பாரி வைச்சா
பத்துபிள்ளை பெத்து
இருவதுபேரன்பேத்தி எடுத்த 
அய்யம்மை

””அப்பவே அப்பாரு சொன்னாரு
இந்தாளு உனக்கு சோடியில்லை ஆத்தானு
கேட்டேனா பாதகத்தி.........

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..