Thursday 1 October 2015

பாச விரிசல்


அன்பா குடும்பம் நடத்தி
ஆசையா புள்ளைய பெத்து

ஊர் மெச்ச ஊட்டி வளத்து 
நல்லாமட்டுமே இருக்கனும்னு
நாளும் நாயா பாடுபட்டு

ஆஞ்சு ஓஞ்சு
நிமிர்ந்து பார்த்தா

அதது சுயநலக் கிளைவிட்டு
நாலும் நாற்திசைக்கு
வேரிழுக்குது

புயலடிச்சப்ப கூட
கம்பீரம் நின்ன பெத்தமனம்

அசைஞ்சு தான் பதறுது

அடிதடி சொத்து தகராறுன்னு
விழுதுக படுத்தும்

பாச விரிசல்ல

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..