Thursday 1 October 2015

உணர்வு அனாதை

புகழிசை விரும்பி 
அவள்

வாசிக்கும் விரல்களில் 
வளர்ச்சியிருப்பதாய் ..நம்பி 
மொழி நடனமிடுவாள்

ரசிக்கும் கூட்டமும்
உச்சாதியில் வெறியூட்டும்

பொய்யென தெரிந்து
மெய் விரிப்பாள்
கைதட்டலுக்கு

ஆடல் அவளுக்கின்பம்
ஆட்டுவித்தல் 
கூத்தாடிக்கு மகிழ்வு

நரம்புகள் அறுந்து
நாடி தளர்ந்து
ஓயும் போது

ஒருவரும் தேடாத
நிதர்சன பாதையில்

அவள்

உதாசீன 
உணர்வு அனாதை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..