Thursday 1 October 2015

வறண்ட கிணற்றின் நினைவாய்



ஆறு ஏக்கர் வயல் நடுவே
ஊருக்கே தண்ணீர் தரும்
ஊத்துக் கிணறு இருந்தது

முப்போகம் நெல்லு
முத்துமுத்தா விளையும்

காலையிலே போய்
கருக்கல் ல தான் வீடு வருவேன்
கிழவி கஞ்சி கொண்டு வருவா

பருத்தி எடுக்க
கடலை உடைக்க
உங்கப்பனும் அய்த்தையும்
பள்ளிக்கூட லீவுல வந்திடுவாங்க

கழனிமேட்டுல சமைச்சு
கயித்துகட்டில ல
உறங்கின சுகம் பத்தி

உற்சாகமாய் கதையாய் சொல்லி
பேரக் குழந்தைகள் அறியாம
விழியோரம் துடைத்தார்

வறண்ட கிணற்றின் நினைவாய்

அப்பா
வாழ்ந்த ஈரத்தை

நானும் ...
பால்ய ஈரத்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..