Thursday 1 October 2015

பொறுமை ஒப்பாரி



சீர் செனத்தில 
குறையிருக்கு நு 
மவளை அடித்த..மருமவனை
எதிர்த்து அதட்டியதால்

அம்மா பகையானாள்
அந்தவீட்டுக்கு

மாமியா தூண்டிவிட்டு
மறுவீடு மறுக்கப்பட்டு
நாதியத்து போன பொழைப்பில்

அப்புச்சியும் போய்
அண்ணங்காரனும்
பொண்டாட்டி பேச்சு கேட்க
திண்ணை அனாதையான அம்மா

திருட்டுதனமாய் அவ்வப்போது 
வந்து யாருக்கும் தெரியாம

எட்டிப் பார்த்து போகிறாள்

மவளையும் 
பேரப்பிள்ளைகளையும்

கூடவும் போக முடியாம
கூறுகெட்டவன் வீட்டில்
கூட்டியும் வைக்க முடியாம

ஊமைகண்ணீர் வடிக்கிறா
பாதகத்தி வயித்தில வந்த மவ

பொம்பள பொறப்பு
பொறுமை ஒப்பாரி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..