Thursday 8 January 2015

தத்துவ பிச்சைகாரனே

உறுத்தும் விழிகளில்
நிறுத்தும் பார்வையோடு

உடம்பில் ஒட்டாமல்
உள் ஒர் ஆள் செல்லும்
தொள தொள
ஆடையோடு

மூட்டை முடிச்சு கட்டி
ஊர் எல்லை ஒதுங்கும்
தாடி மீசை
தத்துவ பிச்சைகாரனே

பின்னாளில்.....
நாடே வணங்கும்

பெரும் தீர்க்கதரிசி
சாமியாராகிப் போகிறான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..