Friday 9 January 2015

குழந்தை மனசு

ஓராயிரம் மைல்களுக்கு
அப்பால் இருந்து

ஒரு வார்த்தையாய்
என் பெயர் உச்சரிக்கிறாய்
அண்ணா....

விழி உடைப்பெடுக்க
ஓடி வந்து
உன்னருகே அமர்ந்து

ஊட்டச் சொல்லி
உயிர் கேட்கிறது

பாச பசியெடுக்கும்
குழந்தை மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..