Thursday 8 January 2015

விதைநெல்பிரியங்களில்

விழி சிரித்த
விதைநெல்பிரியங்களில்
மொழி தட்டி
தளிர் விடுகிறாய்

வேரூன்றி
கொடி தொட்டு
படரும் முன்னே

நீள்வட்டம் போட்டு
நிலை நிறுத்த

என்னை எடுத்துவீசி
ஈவு இரக்கமில்லாமல்
கூறு போடுகிறது

உள் குழைந்த
என் ஈரப்பத நிலம்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..