Tuesday, 9 December 2014

கருச்சூல் பெண்மை

தானாய் சிரித்து
தனக்குள் பேசி

உள்ளாடும் உயிரோடு
மனக்கை கோர்த்து

நினைக்க நினைக்க
இனிக்கும் நிம்மதியில்

தனக்கும் குழந்தைக்கும்

தாய்மைச் சுள்ளி பொறுக்கி
தனிக்கூடு கட்டுகிறது

கருச்சூல் பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..