Tuesday, 16 December 2014

நேசத்தின் வாழ்வியல் -1

எட்டாத ஆசைகளை
எட்டிஎட்டி பிடிப்பதிலேயே....
எட்டாமல் போய்விடுகிறது
எனக்கான ..என் வாழ்க்கை


கவனமாய்...அடுத்து அடுத்து
அடுக்கப்படுகிறது.....
வாழ்க்கைத்தோட்டத்தில்
சந்தோஷப் பூக்களும்......
கவலை மொட்டுகளும்....
கலர் கலர் வண்ணத்தில்


காம்பவுண்ட் சுவர் எழுப்பி
அதற்குள் குளம் வெட்டி
குடிசையமைத்து ....
பாதுகாப்பாய் 
படுத்துக்கொள்கிறது
பணக்கார வாழ்க்கை..


வழிந்திடத்துடிக்கும்
கண்ணீரில் எல்லாம்
வருத்தமாய்...சந்தோசமாய்......
கலந்துள்ளது பிரியமான
உறவின் ஆழங்கள்....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..