Thursday 1 October 2015

அன்னைவணங்கிய பொருள் உரையே

ஆனந்த வழி நிறையே
அன்னைவணங்கிய பொருள் உரையே

வேழமுகத்தோனே
வெற்றி பிழம்போனே

உயிருறைந்த விநாயகனே
உள்ளுறையும் தவத்தோனோ

முழுவழி முதலோனே
அகத்திய கமண்டல நீர் தட்டிய
காக அகத்தோனே

வாய்க்கும் வாழ்வுக்கு
வாயில் காவலோனாய்
முன்வந்தமர்ந்து முக்திவரம்வழங்கும்
சக்திநிறையே

மலைமகள்வடிவாய் மகேஸ்வரி அருளாய்
கலைமகள் அரிதாமாகி திருமகளாய் வடிவமைந்த
உமை எனும் ஸ்ரீஅன்னையிடம்
தான் அமர மடியிடம் கேட்டுப்பெற்ற

ஸ்ரீ மணக்குள மகத்துவ பிள்ளையே..பிள்ளையாரே

அருந்தவ திருநாளில் ...அவனிவந்த பெருநாளில்
வணங்கி போற்றி..வாழ்த்தி மகிழ்ந்து

காக்கும் கடவுளுன்னை

சரணடைகிறோம்..சாஸ்தாவே

ஓம்..ஓம்..ஓம்
 —

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..