Sunday 1 February 2015

ஆண்சிட்டு மனசு

நீள்வகிடிட்ட
நீண்டபின்னலில்
நித்திய மல்லி சூடி

மை தீட்டிய
மீன்கெழுத்தி விழியாள்
மாதுளைப்பல் தெரிய
மதுப் புன்னகை சிந்த

மசக்கை சிக்கி
மாதக்கணக்கில்லாமல்
மயங்கி கிறங்குதடி

ஆறடி மச்சானின்
ஆண்சிட்டு மனசு


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..