Sunday 1 February 2015

அனல் வெம்மையென

அனல் வெம்மையென
ஆழ் உருக்கி
ஆவி திரியாக்கி

எவருமறியா இரவு கவர்ந்து
என்மீதே கருணை
சாரலிடுகிறாய் .....தூறல்கள்ளனே

தொட்ட மழை
விட்ட பின்னும்

சிலிர்த்த தேகபூமியெங்கும்
நினைத்து
பூரித்து நாத்து பிடிக்கிறது

திரண்டுசெழிக்கும்...
சிணுங்கல் புல்லரிப்புகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..