Sunday 1 February 2015

பாக்கியம் பெற்ற அப்பாக்கள்

வாழ்வியல்
வளப் போராட்டங்களில்

தாளா முடியா துயரம்
நெஞ்சணைக்க

வாய்விட்டு அழ முடியா
வாதனையில்

துணைப் பகிர்தல் கூட
துயர் சேர்க்க

எதுவுமறியாத மகள்

தாய்மை தலைகோதி
மடி கிடத்தும்

பாக்கியம் பெற்ற அப்பாக்கள்
என்றும்

எவரும் வெல்ல முடியா
பலசாலிகளே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..