Sunday 1 February 2015

ஆதவனாய் ஒளியெழுந்து

ஆயிரம்கோடி மின்னல்கள்
ஆளுமையாய் ஒன்றிறங்கி....
ஆதவனாய் ஒளியெழுந்து
அவனி வந்த
அன்புச் சகோதரனின்... Venkatesan Venkatesan
அருந்தவ புதல்வன் ஷியாம் குட்டிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழையடி வாழைப் பரம்பரையின்
பெருமை சொல்லி பெயர் பரப்ப
பூமி வந்த வம்சக் குருத்தே

குட்டி சிங்கமாய் ,,,குதுகல நடையுடன்
மனது அள்ளி மகிழ்ச்சி நிறைத்து
வெற்றி நடை போடும்
வேந்தர்வழி தென்றல் பிரியமே

கல்விகேள்வி செல்வங்களுடன்
நலம்பலம் ஆயுள் நிறைத்து
புகழ் மாலை தோள் சேர்த்து...
அன்னை தந்தை தெய்வ ஆசிகளுடனும்

இந்த,,அன்பு அத்தையின் பிரியங்களுடனும்

குலம் தழைக்கும் எங்கள் செல்வக்குருத்து
வாழ்க ..வாழிய பல்லாண்டு...

இனிய ஆசீர்வாதங்கள் டா குட்டி தங்கம்...


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..