Sunday 8 February 2015

உயிரெழுத்தாய் அன்னை

அதி மன நுட்பமே
ஆனந்த மய பிம்பமே

இனிமை நிறை வேதமே
ஈகை குண நாதமே

உயிர் ஒளி தத்துவமே
உயர்நிறை தாகமே

எண்ணில்லா பிரியமே
ஏகாந்த சுகந்தமே

ஐயமில்லா ஆதூரமே

ஒளிபெரும் சாநித்யமே
ஓவிய நிறை சித்தாந்தமே

ஒளதட ஆயுள்யமே
ஃதென எங்கும் நிறைந்து...உயிரெழுத்தாய்...
எண்சாண் உடல் ஆளும் ஆளுமை அன்னையே

என்றும் நின்பாதம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..