சமுத்திர பெரும் வாழ்வு
நடந்தவைகளை
கடந்து
தெரிந்தவர்களை
விலக்கி
தொடர்ந்தவர்களை
தொலைத்து
வாழ்ந்தவர்களை
வழியிலே விட்டு
எவருக்கும் நிக்காமால்
ஆண்டொன்றுக்கு
வயதொன்று கூட்டி
அனுபவமாய் நம்மை
முதுமை சொட்டி
கண்முன்னே கரைக்கிறது
தங்கமீன் பிறவியின்
சமுத்திர பெரும் வாழ்வு
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..