Sunday 1 February 2015

சமுத்திர பெரும் வாழ்வு

நடந்தவைகளை
கடந்து

தெரிந்தவர்களை
விலக்கி

தொடர்ந்தவர்களை
தொலைத்து

வாழ்ந்தவர்களை
வழியிலே விட்டு

எவருக்கும் நிக்காமால்
ஆண்டொன்றுக்கு
வயதொன்று கூட்டி

அனுபவமாய் நம்மை
முதுமை சொட்டி

கண்முன்னே கரைக்கிறது

தங்கமீன் பிறவியின்
சமுத்திர பெரும் வாழ்வு


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..