Sunday 1 February 2015

விழியின் இமையென








விழியின் இமையென....
விழி மணி நிறைந்து....
விழித்திருக்கும் உறவெங்கும்..... இரா. குமார்
விரத தவமிருந்து

வான்சித்தர் வாழ்த்துரை எழுத
இறைப்பிரியங்கள் இடவலம் அமர்ந்து ஆசிவழங்க
தேவர்கள எல்லாம் பன் பாடி பூத்தூவி
தேவதைகள் சாமரம் வீசிய சக்தி திருநாளில்

மேன்மக்கள் குழும
மேலோர் கைகுலுக்க
மேல் ஆளுமைகளோடு
மென்மை பிரியங்கள் ஏந்திய
கலைமகளாம் திருமகள்வடிவான
கல்விகேள்வி சிறந்த கற்பியல் குலமகளை
எங்கள் அண்ணியார்...கலைச்செல்வியரின்..கரம்பிடித்து
கருத்தொருமித்து.....கஷ்டசூழலில்...எங்கும் எதிலும் குறைஎனும் சொல்லே மனமோடு..கண்தீண்டாது
தாய்மைச்சிறகுவிரித்து காத்து .......

இவர் போல் யாருண்டு...இவருக்கு நிகரும் யாருண்டு
என்றே...வள்ளல் மனமாய்...வாழ்த்தும் குணமாய்
பொன்கழஞ்சு பிரியங்கள் தாங்கி,.....
எதிரிக்கும் இரங்கும் ஆசானே
கேட்பவர் கேட்காமல் இருப்பதை அள்ளி வழங்கும்
கர்ணரே..கொடுக்க கொடுக்க பெருகும் அமுதசுரபியே

விரலசைத்தால்...விழுந்தடித்து செய்ய ஆட்கள் நிறைந்திருப்பினும்....
சக்தி மிகு ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்பினும்
தனக்கென இதுவரை எதுவும் ஏற்றுக்கொள்ளாமல்...
தான் என்று எதுவுமில்லை என்றே எண்ணும் சிகரப்பணிவே....
பார்த்தவர் அறிந்து .....பழகியவர் உணர்ந்து.....
கேட்பவர் எல்லாம் வியந்து ....உடனிருப்பவர் கொண்டாடும்
தாய்மொழி பிரமாண்டமே......

எங்கள் முல்லை அரும்பின் ...முழுமை செல்வமே
தான் வரும் தலைமுறைக்கு.....தனி வழி கொடுத்து
சிகரமென எழுந்து நிறக்கும் சாதனை வேள்வியரே

தமக்கையாம் என் மொழியறிவிற்கும்...தனிஅமைச்சு இடம் தரும் தகைசார்ந்த சான்றோரே

உங்கள் திருநாளில்....உம்மிடம் நாங்கள் தாழ் பணிந்து
நாங்கள் ஆசி வேண்டுகிறோம்....

தங்கள் உயிர் நேசிப்பு
தாய்மொழியாம் தமிழன்னை...நான் வணங்கும் என் அன்னை உடனிருந்து..ஆயிரம் பிறைகண்ட வாழ்வோடு...
அவனிகல்வெட்டாய் தாங்கள் இருவரும் நீடுழி நிலைத்திருக்க

வள்ளுவன் வாசுகி போல்....இறை செய்த உருவமாய்
எங்கள் ஆசானும்..அண்ணியாரும் ....செழுமையெழுந்த சிற்பங்களாய்..இன்னும் இருநூறு ஆண்டுகள்..கழித்தும் ,..இலக்கியம் போற்றி வணங்கும் தலைமுறை முன்னோட்டம்
கண்முன் தோன்றி விழிநிறைய.....

மங்கலம் பொங்கும்தங்கள் மணநாளில்....
மனத்தாழ் பணிந்து வணங்குகிறேன்
இனிய வணக்கங்கள் ஆசானே...!!!!!!






No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..