Sunday 1 February 2015

தீரவைராக்கிய மனசு






வெற்றி வருகுது..வேல் வருகுது
சூற்றி சூழும் பகையே விலகு

வீரன் வருகிறான் வேந்தன் வருகிறான்
எதிர் நிற்கும் கோழையே ஓடு

பரி வருகுது வேகம் வருகுது
தெறித்து வழிவிடு பாவமே

சூரன் வருகிறான் தீரன் வருகிறான்
சுதந்திரம் காக்க என் மறவன் வருகிறான்

சூல் கொண்ட வெள்ளையனே
விடியல் காண விலகி ஓடு
பிச்சையிடுகிறோம் உயிரை
பிடித்தெடுத்து ஓடுடா கயவனே

தினவெடுத்த தோள்திமிராய்
நிமிர் மீசை முறுக்கு

எம் கட்டபொம்மு வருகிறான்

கப்பம் கேட்ட கழனித்திருடனே

இனி
கனவில் கூட என் தேசம் நினையாதே

என்றே ...

வாழ்ந்த சரித்திர ஓவியங்களை.....
வரலாறாய்....விழியணைக்கையில்

சூழ் முரசு கொட்டுகிறது
எம் நாடெனும்
பெருமிதமாய் விம்மித்தணியும்

மறத்தமிழச்சியின்
தீரவைராக்கிய மனசு



No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..