Tuesday 24 February 2015

நெகிழ்ந்த நேசத்தின் தோழமை கூடு


நிறைந்த காதலில்லாமல்
நினைவில் கூட காமமில்லாமல்

நெகிழ்ந்த நேசத்தில்
எத்தனை பிரியமாய் இருந்தது

எவரும் தீண்ட,..திருட முடியா கலையாய்
அன்புச் சுள்ளிகள் எடுத்து
நமை அலைவரிசை இணைத்த
நம் தோழமை கூடு

துக்க சந்தோஷம் விழியணைக்க
தோள் சாய்ந்த உரிமைகளில்
இன உருவ பேதமையின்றி

எத்தனை சிரிப்புகள்
எத்தனை எத்தனை பகிர்வுகள்
நம்பிக்கையாடியது
நட்பின் ஆணிவேராய்

முட்டி மோதி கொள்ளாமல்
காயம் ரத்தம் இல்லாமல்
சிறு உரசல் இடித்துக் கொள்ள
இழப்பு தாங்க விரும்பா மனம்
இருப்பதை காப்பாற்ற
அருகிருந்தும் அச்சுறுத்தலுடன்

விலகல் ..விழியோடு
வலியணைத்த போதும்
வழியிருக்கிறது

நீ என் இமைநெருக்கமே
எனும் மருந்திடலுடன்

சில பாசங்களும் நெகிழ்வுகளும்
பொக்கிஷம் போல

பத்திரமாய் தான்
பூட்டிக் காக்க வேண்டுமோ

உரியவரிடம் கூட
உரிமையுடன் சொல்லாமல்

1 comment:

  1. அருமையான வரிகள் சுந்தரி.....

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..