விழித்திருக்கும் போதே விழியுறைந்து சாகும் தலைமுறை இனம்...........
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்தவன் எல்லைமீறி சிறையெடுத்து இல்லா பழிசொல்லி அடக்கியாள அவதாரம் எடுக்கிறான்.... புறமுதுகு குத்தும் அசூர வீரனாய்
கண்டும் கேட்டும்..கண்ணார பார்த்தும் கையறுநிலையில்............ மனம் அறுக்கும் மனிதாபிமானம்
மீன் தேட போனவன்... கருவாடாகி வருகிறான் உப்புத்தோல் பதனிடலில்
கடிதமெழுதி..பிணக் கழுகளிடம் பிணை நீதி பேசுகிறது
பதவி பாதுகாப்பு அரசு
சுத்தி இருப்பவன் தோள்கொடுக்க நாளை நம்மை நாட்டோடு சிதைப்பானோ எனும் அச்சத்தில் ...
இன்று மரணம் ஊதப்படும் சங்குக்கு செவி சாய்க்கா...பேரரசே
மனிதம் அழிய பார்த்திருந்து யாருக்காக காக்கப் போகிறாய்...இந்த மண்பூமியை
நியாயவேர்கள் பூமி புதைந்து அப்பன் செத்தாலும்..சுப்பன் செத்தாலும் அவரவர் சுயநலமே பெரிதென ஓடும் மனிதபண இயந்திரஉலகில்
இறுதி முடிச்சு கழுத்து இறுக்கும் வரை
என் சகோதரனே.. எப்படியாவது மீள் எழ மாட்டாயா என்று இறைவேண்டி உனக்காக சிந்த எம்மிடம் மிச்சமிருப்பது ...ஊமைக்கண்ணீரும் உன் வலி சொல்ல ஓர் வார்த்தையுமே.........
சரித்திர ஆட்சி மாறினாலும்
தரித்திரவழி மாறாத....மரணமே என்றும்
இந்தியப் பெருமை..மார்தூக்கி வீராப்பு வணக்கம் சொல்லி
நித்தம்வீர சாவு காணும் எம் தமிழ் மீனவனுக்கு

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..