Saturday 29 November 2014

உயிராடும் உறவு


கண் பார்க்காமல்
கட்டியணைக்காமல்
கை கோர்க்காமல்

உதிரம் பகிராமல்
உடன் பிறக்காமல்

சரிசம வயதில்
சமன் செய்யும்
பாசத்தில்

என்னை அவளும்
அவளை நானும்
பெயராய் எழுத

அனைவர்
அழைக்கும் குரலுக்கும்
இருவரும் திரும்பி பார்க்க


நான் அக்கா...
அவள் தங்கை...

என்பது...இருவருக்கும்
நம்பிக்கை உணர்வாடும்
உயிர் சொந்தம்...

உன் சிரிப்புகள் தாங்கும்
சக்தி தந்த இறைவன்...

இன்னும் உன் கண்ணீர்
தாங்கும் சக்தி எனக்கு தரவில்லை
என்றே நம்புகிறேன்...

என்னிடம் நீ
கலங்கும் போதெல்லாம்

உன்னை ஆறுதலணைத்து
என்னை நான் தைரியமாய்
வேஷமிட்டு மறைத்து

உயிராடும் உறவுகளை
நட்புகளாய் தந்த
முகநூல் கடவுளுக்கு நன்றி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..