Sunday 23 November 2014

குப்பை மனிதங்களின் கோரச் செயல்

குப்பை மனிதங்களின்
இரவு உணர்வு சமைத்த
இளங்குருத்து பரிதாபங்கள்.....

ஆசை எழுந்து ஆடியதா
வேட்கை எழுந்து வேகம் கண்டதா

தந்தவன் சென்று ஓடினானா
தாய் என சுமந்தவள் ....
தன் மாதக் கணக்கு ..சுழற்சி மறந்தாளா

கருவென கண்ட பின் அழிக்கா இயலா
மனநிலை கொண்டாளா...இல்லை
மருத்துவநிலை தடுத்ததா

எதுவோ சூழ்நிலை...அறியாததால்
இழிநிலை கொண்டது இளம்பிஞ்சு

தொப்புள் கொடி காயம்
இன்னும் ஆறவில்லை

பனிக்குட ஈரப்பிசுபிசுப்பும்
காயவில்லை

தோள்வளரா சிட்டு
தொட்டில் கண்டது ..குப்பைத் தொட்டியில்

காண்போர் கண்கள் எல்லாம்
கலங்கி குளம் கட்ட.....

கவலையறியாது..கனவோடு
விதிபடைத்தவனிடம்
விளையாடி ....உறக்கத்தோடு
உதடு மலர்த்தி சிரிக்கிறது....சின்னபிஞ்சு

ஈவு இரக்கமில்லாமல்
விடுதலை என வீசிச் சென்றவளே

வாழ்வுமுறை தப்பிய உன் வயசுத்திமிருக்கு
இது என்ன..வழி... பாவம் செய்தது..??

பத்துமாத சலிப்பாய் சுமந்தவளே
ஊற்றாய் சுரந்து ..மேனி நனைக்கும்

உன் சீம்பால் வற்ற ...வலி பொறுத்து நீ
என்ன வைத்தியம் மேற்கொண்டாய்..??

நல்லவேளை....
உன் கம்ச நெஞ்சிலும் ...
கொஞ்சம் ஈரம் இருக்கிறதடி..இயலாமையே

கள்ளிப்பால் இரையாக்காமல்
உயிர்பிச்சையாவது தந்தாயே ..உன் உதிரத்துக்கு

இல்லை ஒரு பிள்ளையென
தவமிருக்கும் மானிடத்துக்கெல்லாம்
கருப்பை சுருக்கி இறுக்கி முடிச்சிடும்
கருணை தெய்வமே

பிள்ளையை அனாதையாக்கி
பெண்மையை தாய்மைஏங்க வைத்து
என கண்ணீர் சமைக்கும் ...

இறைவனே...இது
உன் திருவிளையாடலா
திமிர் விளையாடலா

சந்திர சூரியனாய்.....
ராகு கேது..நட்சத்திரப் பலன்களுடன்

சுழலும் வாழ்க்கையை
சுழட்டிச் சோவி போட்டு

மானிட இல்லாமை தான் தருகிறது
மாயச்சுழற்சி....விதிக் கோல ...

இறை நம்பிக்கை
கோள்களின் காலம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..