Sunday 23 November 2014

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

அன்பும் பாசமும்
அமைதியும் அடக்குமுமாய்
நிறைந்த ...மரியாதைக்குரிய

தோழமை நட்புக்கு பூமதி என்.கருணாநிதி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிலரைப் பார்த்தாலே ஓர் பிரியமான ஆளுமை சக்தி
நமையறியாமல் நமக்குள் ஆனந்தமாய் சூழ்ந்தாடும்
அத்தகைய உயர் சக்தி நீங்கள்
தெளிவான பதிவுகள்..கனிவான காலை வணக்கங்கள்
அழகாடும் புகைப்படங்கள்...எழிலாடும் குறும்புகள்
பாசமாடும் வார்த்தைகள்....

வாதடும் தொழிலில் ...நீதி வழங்கும் நிதானத்தில்
தினம் சுழலும் உங்களுக்கு
கோபம் எனும் சொல் அறிமுகமாகி இருக்குமா
எனச் சந்தேகமே கொள்ளவைக்கிறது
உங்கள் சாந்த முகம்

கருத்தோடு காரியம் யாவிலும் கைகொடுத்து
காதலாய் ஒருமித்தணைத்த கணவரோடும்

வம்சம்செழிக்க வாழைக்குருத்தாய் வேரிட்ட
பிள்ளைசெல்வங்களுடனும்

இனிமை செழுமையாய்...எல்லா நலங்களும்
வளங்களாய் பெற்று.....மங்கலப் பெருவாழ்வு வாழ்ந்து
தர்மதேவதையாய்...உலாவந்து உவகை சூடி

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மேடம்......

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..