Tuesday 25 November 2014

தாயெனும் உணர்வு சிநேகிதி

எதற்கெடுத்தாலும் திட்டி
எண்ணெய்படிய
வலிக்க
வாரி பின்னி

சத்தம் போட்டு
சாப்பிடவைத்து

ஆயிரம் சண்டை
போட்டாலும்

அடுத்த நொடி மறந்து
எல்லாம் பகிர்ந்து

சுண்டுவிரலில் முந்தானை
முடிச்சிட்டு உறங்க
நெற்றிமுத்தமிடும்
அவளே

நான் ஆயுள்தொடரும்

என் தாயெனும்
உணர்வு சிநேகிதி!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..