Sunday 23 November 2014

அஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்


அஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்

பிறப்பறியா பிள்ளையாய்
வளர்ப்பறிய வகைப் படுத்தபட்ட வீரனும் நான்

துர்வாசர் மந்திரம் சோதிக்க
சூரியன் அழைத்த குந்தியின்

காதுவழி கவசகுணடலமேந்தி வந்தது
கர்ணனெனும் என் பிறவி

அன்னையவள் பயம் கவ்வி
ஆற்றோடு சுழலாடி அனாதையானதில்
தேரோட்டி ஒருவன் கை சிக்கி
சீராட்டி ராதே வளர்க்க.......
மீசை முறுக்கேறியது இளமை

சத்திரிய வீரத்தில் ரத்த அணு துடிக்க
பிராமண வேடமேந்தி பரசுராமரிடம் பணிந்து வில் ஆள
வண்டெடுத்து தொடை துளைத்த
இந்திரன் சதியில்...குரு உறங்க அமைதி காக்க

பொய் வினை சாபமாய்
குத்தப் பட்டது என் உயிரின் முதல் அம்பு

சத்தம் கேட்டு இலக்கு தாக்கும் திறனறிய
பார்க்காமல் பசு கொல்ல ...பாப்பன் சாபம்..குத்துகிறது
இரணடாவது அம்பாய்

அழுத சிறுமிக்கு
நெய்பிரித்த மண்ணினால்
கசங்கி துடித்த பூமா தேவி குத்தினாள்
மூன்றாவது அம்பு

பாண்டவ மூத்தோனாய் பாராள பிறந்த
என்னின் வீரவேள்..கூர்தீட்டப்படுகிறது
துரோணாச்சாரிய புறக்கணிப்பில்
குருவின்றி தந்தை அஸ்தமனத்தில் குலவித்தை கற்க.....

கற்ற கலை கையெடுக்க நடுக்கூடத்தில்
வளர்ந்த சாதி அவமானபடுத்த
வீழ்ந்த தலை நிமிர்த்தப்பட்டு
ராஜமகுடம் சூடப்படுகிறது...
தோழனென தோளணைத்த துரியோதனனால்

கேடாய் கெட்டவனாகினும் மானம் காத்து
உப்பிட்ட விசுவாசத்தில்
உடன்பிறந்தோரையும் எதிர்க்க துணிகிறேன்
உயிர் கொடுக்கும் நட்புக்காய்
பிறவி இது எனத் தெரிந்த பின்

உச்சி கொதிக்கும்
என் சூரியபொழுது தர்மத்தில்

தாயவள் வரம் கெஞ்ச....
வேடமிட்ட இந்திரன் கையேந்த
ராஜதந்திரி கண்ணன் சித்து விளையாட
சாபங்கள் அணிவகுக்க....
சல்லியனும் கைவிட.....

அநீதி வென்று நீதி ஜெயிக்க....

தர்மகுருதிகேட்டுவந்த கிருஷ்ண அவதாரம்
கண்டு ரசித்த..படி

பிறப்பிலே அறுத்தவள்
நடு களத்திலே மடியிட்டு

என் மகனே என
ஓலமேந்தி அழ

குருசேத்ர போரில்....பதினேழாம்நாள்
பின் பிறந்தோன்...தம்பியோன்
வில்லாளி அம்பினால் வீரமரணமேந்தி....
படைத்தவன் சொர்க்கமேறுகிறது என் ஜென்மம்..

மண்ணாள பிறந்தேனா..மடிசாய அழுதேனா
தர்மம் நாட்ட வளர்ந்தேனா தாய் குலபெருமை அழித்தேனா

என்னே என்பிறவி........

மா பாரதம் காக்க
மாபெரும்காவியமாய்
கண்ணனவன் லீலை செய்து
தர்மமது ஜெயித்து...

இலக்கியபூமி செழித்தோங்கி
மானிடம் வாழ் காலம்வரை

இவ் இதிகாச வரலாற்றில்..

இருக்கும் வரை

இல்லையென கொடுத்து

நட்புக்கென உயிர் காத்து நின்ற

கற்பு வழுவா என் பிறப்பும்
ஓர் கலப்பில்லா மைல்கல்லே...!!!!

2 comments:

  1. http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_25.html

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. நன்றி... தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவிக்கவும் ராஜேஸ்வரி மேடம் ..:)

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..