Saturday 29 November 2014

மணநாள் வாழ்த்துக்கள்

அன்பின் ப்ரியங்களாய்..அன்றில் சொந்தங்களாய்
அழகின் முகவரிகளோடு ...
இனிமையாடும்...இளமைதோழிக்கு.... Chelli Sreenivasan
இனிய மணநாள் வாழ்த்துக்கள்

குழந்தை குறும்பாடி அனைவரையும்
சிரிக்கவைத்து சிந்திக்க வைத்து
சிறகு விரிக்கும்
அன்புத்தோழி நீ

உன்னைப் பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்
வாழ்க்கையை இலகுவாய் அணுகுவதற்கு
அனைவரும்

காம்பவிழ்ந்த மொட்டாகவே...வேரின்றி
வேறிடம் ஊன்றப்படுகிறது..பெண் எனும் நிலநாத்து

அஃது தன்னியல்பு மாறாமல்
தனித்து செழித்தோங்கி..வம்சம் தந்து
வாழ்வு தழைக்க..எத்தனை புரிதல் பக்குவம் வேண்டும்

இணையென வரும் உயிர் சொந்தத்திற்கு

முற்பிறவி..வரமா..ஜென்ம ஜென்ம தவமா என்றே
அனைவரும் ஆச்சரியப்படவைக்கும்
அன்பு இணை பிறவிகள் நீங்கள்

செல்லியின் ..கருத்தில்..வெற்றியில்
அவர்தம் ஏகாந்த சுதந்திரப்பெருவெளியில்

உருவமில்லா தென்றலாய்
உடன் இணைந்திருக்கிறது...
பெருமாள் பெயரோனின் பேரன்புகள்

தாரைவார்த்து கொடுத்த குழந்தையை
தத்து எடுத்துகொண்டார்......மணமுடித்து....தன் குழந்தையாய்

நேர்மையெனும் அன்பின் புரிதல்களை
தன் வசப்படுத்தி...வாழ்வை வெற்றி லாவகாமாய்
இமையணைக்கும் இதய தோழியே...

என்றும் என்றென்றும்....அன்பெனும் அடையாளங்களாய்
இருவரும் இனிமைசூடி..இளமையாய்...
நேசப்பிரியங்கள் தளும்பி......

சரித்திரப் பெருவாழ்வு வாழ....

என் அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்

இனிய மணநாள் வாழ்த்துக்கள் தோழி..


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..