Sunday 23 November 2014

பெண்மை...பெருந்தவ பிறப்பு

பெண்மை...பெருந்தவ பிறப்பு

ஒருகோடி உயிரணுவில் ஓரணு கரு உடைத்து
ஈரிணை குரோமோசோம் ஒன்றாய் இணைந்து
பிறந்த மகத்துவமா ...??

கலைமகள் மலைமகள் உடன் ஒளித்து
திருமகளாய் கொலுசாடி வந்த கோபுரத்திருவா ..?

கரு உதிக்கும் போது ....
நீயாய் தாயாய் உனை சில தாயுமானவன் தேட

சிறுவலி கொண்டே உனை நோக்குகிறாள்
பத்துமாதம் சுமந்தவள்

மீண்டும் நானா
இப்பூமியில் என....

ஒவ்வொருகட்டத்திலும் அவள் பெண்மையாய்
மாதச்சுழற்சி சிக்கி அனுபவித்த
படிமநிலை வலி அந்தகணத்தில் அந்த தாய்மையில்

வேண்டும் வேண்டும் ம் பெண்மகவு என நினைக்கும்
ஒவ்வொரு தாய்மையும் ஒருசிறு சலனமாய்..சிலநொடிகள்
இமை மூடி மனதுக்குள் குமைகிறாள்.......அதுவரை கடந்த
தன் அனுபவ பெருவழி நினைத்து

கல்வியில் கேள்வியில்...
அன்பில் அனுபவத்தில் ...
பக்குவத்தில் பராமரிப்பில் நிமிர்ந்த திமிராய்
வலம் வந்தபோதும்...தாய்மையாய் ஆண் உணர்ந்த போதும்

உடலாய் மட்டுமே பார்த்து வீழ்த்தப்படுகிறாள்
ஒவ்வொருகட்டத்திலும் எதிர்படும் தலைகண ஆண்மைதிமிரால்

வெளிவராத போது இருந்த சுதந்திரம் கூட
வெளிவந்து அவனி ஆளும் போது
அவள் கற்புக்கு மிச்சமில்லை

கணவனை விட ..சகோதரனைவிட
மகனைவிட......
சில நேரங்களில் தாயை விட

தகப்பன் எனும் உறவினால் மட்டுமே..புரிதலாய்.
அதிகம் கொண்டாடப்பட்டு நேசிக்கிப்படுகிறாள் பெண்.....

ஆண் கொண்டாடப்படும் பிரியங்களில்
தனக்கு கொடுக்கா முக்கியத்துவங்களில்
மனப் பொறாமை விழித்தெழுந்து
பல இடங்களில்
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகவும் போகிறாள்

காக்கும் சக்தியாய் வந்த
ஆக்கும்சக்தியும் அவளே
அழிக்கும் சக்தியும் அவளே ஆகிப்போகிறாள்

சில வார்த்தைகளில் சில பார்வைகளில்
சில்லறைப்பேச்சுகளில் பெண்ணை குழி வீழ்த்தும்
நுனிநாக்கு விஷத்தை கூடவே வைத்து இங்கு அலைகிறது
மிருக மானிடம்

ஆண்..
தாயை ..மகனில் புரிகிறான்
சகோதரியை ...தாயில்லாத போது உணர்கிறான்
மனைவியை.....நோய்காலத்தில் நெஞ்சுருகுகிறான்
மகளில் மட்டுமே ..தன் திமிர் காலத்தில் பிஞ்சுக்கால் விழுகிறான்

ஆதாம் விலா எலும்பில் உருவாகிய
பூமி சுழல் சரித்திரமே

போற்றோர் போற்ற
தூற்றோர் தூற்ற..
கனிவாய் பிறந்து
கள்ளிப்பால் தப்பி வளர்ந்து

கொடும்பார்வை தீண்டா
பருவம் வளர்த்து

தான் எனும் ஈரம் உணர்ந்து
தனியாய் பெண்மை பூத்து காத்து

தனியொருவனிடம் மொட்டு கற்பவிழ்த்து
தாய்மையெனும் மகுடம் சூடி

தனக்கெனும் வாழ்வு துறந்து
அனைவர்தேவையும் நிறைத்து

மண்ணுள் விதையும்
ஆலம் பெரும்காடே....

நீயே அவனி...நீயில்லால் இயங்குமா
இங்கு மானிடப் பிறவியின் நிம்மதிச்சூல் அகிலம்

பெண் என்று பெருந்தவஞ் சூடி பிறப்பெடுத்து வந்த
என் பெண்மை நேசங்களுக்கு

சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.....

2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சுபாஷிணி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - இரண்டாம் நாள்

    ReplyDelete
  2. நன்றி... தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் தெரிவிக்கவும்...:)

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..