Tuesday 25 November 2014

என் நேச சண்டியரே

ஆளுமையாய் பேசி
அலட்சிய பார்வையில்
தெனாவெட்டு தெறிக்க

நீ 
நிற்கும் போதெல்லாம்

முடிவலிக்க ஆட்டி
முட்டிபோடவைக்க
மனம் கெஞ்சினாலும்

மிஞ்சும்ஆசை கொஞ்சி
உன் திமிரும் நான் ரசிக்க

குறும்புக் கண்ணடித்து
தப்பிக்கிறாயடா

என் நேச சண்டியரே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..